Tuesday, September 4, 2012

இயேசு என் பக்கம்

‘தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?  (ரோமர் 8:31)

நீ மாத்திரம் தனியே உல்லாசப் பிரயாணம் போகமுடியாது” என்று தனது தங்கையிடம் கூறினான் மோகன். ‘ நீ மிகவும் சிறு பெண் பேசாமல் வீட்டிலேயே இரு’ என்று ஏளனமும் செய்தான். அதனால் அவனுடைய சிறு தங்கை அழ ஆரம்பித்தாள். தன்னுடைய தந்தையாரிடம் ஓடி அப்பா அண்ணன் சொல்கிறான் உல்லாசப் பிரயாணம் போக முடீயாதாம். நான் சிறு பெண்ணாம் என்று அழுதாள்.

அதற்கு அப்பா நீ அண்ணாவிடம் சொல் உல்லாசப்பிரயாணம் போவதா இல்லையா என்பதை அவன் தீர்மானிக் வேண்டியதில்லை. நான் தான் தீர்மானிக்க வேண்டும். என்று நீ உல்லாசப் பிரயாணம் போக வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்.இதைக் கேட்டவுடன் சிறுமிக்கு வந்த மகிழ்ச்சிக்க அளவேயில்லை. மோகனைப் பற்றி அவள் கவலைப்படவே இல்லை.

ஏனென்றால் அப்பா அவள் பக்கம் என்று அவளுக்கு நன்றாக புரிந்துவிட்டது. அண்ணா அப்பா சொல்லிவிட்டார் நான் போகலாமென்று நீ இனி ஒன்றும் செய்ய முடியாது என்று மோகனிடம் தைரியமாகக் கூறினாள்.

இதே போல்தான் பவுல் என்ற தேவனுடைய மனுதர் தேவனைப்பற்றி கூறும்போது ‘தேவன் என்னோடு கூட இருக்கும் போது நான் ஏன் பயப்படவேண்டும். என்று கேட்டார். சில வேளையில் மனிதர்கள் எம்மை விரோதிக்கலாம். அவர்கள் எம்மைப் பகைத்து எமக்கு தீங்கு செய்யவும் முனையலாம். ஆனால் எல்லாவற்றையும் விட சாத்தானோ நாம் இயேசு சுவாமிக்குள் சந்தோசமாக இருப்பதை விரும்பாதவனாகவே இருக்கின்றான்.ஆனால் இயேசு சுவாமி எம்மை நேசிக்கிறார். எமக்காக மரித்தார் எமக்காக இயேசு சுவாமி தம்முடைய உயிரையே பலியாகக் கொடுத்திருக்கும் போது மற்றக் காரியங்களை நிச்சயம் கொடாமலிருப்பாரா?இயேசு சுவாமி தன்னுடைய உயிரையே எமக்காக கொடுத்ததால் அவர் எவ்வளவாக நம்மை நேசிக்கிறார். ஆம் அவர் எம் பக்கம் இருக்கிறார். ஆகவே நம்மை யார் தோற்கடிக்க முடியும்? ஒருவராலும் முடியாது.ஆம் அன்பான நண்பர்களே இயேசு நம்மோடு இருக்கவே விரும்புகிறார். ஆனால் நாம் அவருக்கு இடங்கொடுத்தால் தானே அவர் நம் பக்கம் இருக்க முடியும். நீங்கள் உங்கள் உள்ளத்தை அவருக்கு கொடுத்துள்ளீர்களா? நீங்கள் அப்படி கொடுத்திருந்தால் அவர் உங்கள் பக்கம் இருப்பார். உங்களை விரோதிப்பவர்களை அல்லது சாத்தானைக் கண்டு நீங்கள் பயப்படாதீர்கள்.!உங்களுக்காக தமது உயிரையே கொடுத்த அவர் நிச்சயம் உங்களுக்காய் எதையும் செய்ய தயாராகவே இருப்பார். இன்றே அவரை உங்களுடையவராய் ஆக்கிக் கொள்ளுங்கள். இயேசு சுவாமி உங்கள் பாதுகாப்பாய் இருக்க இன்றே ஜெபியுங்கள்.

உன்னைத்தான்…

.......தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்க்கு வரவளைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயியும்….. ( 1 பேதுரு 2 : 9 )

நாம் மகிழ்ச்சியாயிருப்பதை இந்த உலகமொ உலகத்தின் அதிபதியோ விரும்புவதில்லை. மகிழ்ச்சியுற வேண்டியவற்றை நாம் சிந்திக்காதபடி பாரங்களை ஏற்றி நம்மை துக்கத்தில் ஆழ்த்துவதுதான் இவ்வுலகத்தின் தந்திரம். நாமும் அநியாயமாக அதற்க்குள் மாண்டுபோகிறோம். வாழ்நாட்க்களை வீணடிக்கிறோம்.

ஒரு பிரசித்திபெற்ற மேடையில் தாலந்துகளுக்கான போட்டி நடந்தது. ஆடம்பரமான பல போட்டியாளர்கள் மேடையேறி மக்கை ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர். அந்த வரிசையிலே ஒரு பெண் எறினாள். மண்டபத்திலே “ஊஊஊ” என்ற ஒரு சத்தம். இவளால் என்ன செய்யமுடியும் என்ற பரிகாசம்தான். ஆனால்அவள் ஒலிபெருக்கியை கையில் எடுத்து உதட்டருகே கொண்டு சென்றுபோது அந்த பிரமாண்டமான மண்டபமே அமைதியானது. இப்படி ஒரு குரலா? எல்லோரும் இருக்கையை விட்டு எழுந்து விட்டனர். கரகோஷம் வானைப்பிளந்தது. மத்தியஸ்தர்களும் அசைந்துவிட்டனர். ²இவளால் முடியாதே² என்று நினைக்த்தக்க இந்த எளிமையான பெண்ணின் வாயிலிருந்து இப்படியொரு அற்புத பாடலா? 2009 ம் பிரித்தானியாவில் நடந்த உண்மை சம்பவம் இது.

நீங்களும் நானும்கூட மிக எளியவர்கள் தான். உலகம் எங்களை கண்டிராது. குடும்பத்திலும் நம்மை கணக்கெடுக்காதிருக்கலாம். இவையெல்லாம் கிறிஸ்துவின் அழகு நம்மில் ஊற்றெடுத்துப் பாயும் வரைக்கும்தான் அந்த அழகு மாத்திரம் நம்மில் தெரியுமானால் இந்த உலகம் தன் முக்கில் விரல் வைக்கும். அப்படித்தான் தேவன் நம்மை திட்டமிட்டிருக்கிறார். நாம் வாழ்வு என்னும் மேடையில் நிற்கிறோம். நமது குடும்பத்தார் நண்பர்கள் சபை மக்கள் நம்மை அற்பமாய் நினைக்கிறவர்கள். யாவருக்கும் முன்னிலையில் நாம் நிற்கிறோம். இவனா! இவளா! இவனைப்பற்றி எனக்குத் தெரியாதா? இவளின் கடந்த கால நாற்றம் தெரியாதா? இப்படியாக எத்தனையெல்லாம் பேசுவார்கள். ஆனால் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும் நமது வாழ்விலிருந்து புறப்பட்டு பாயும் போது நிச்சயமாய் இந்த உலகமே எழுந்து நிற்கும். பேதுரு எழுதியவார்த்தைகள் எவ்வளவு மகத்தானவை. நம்மில் வெளிப்படுகின்ற கிறிஸ்துவின் அழகு ஜோடிக்கப்பட்டதல்ல. அது வாழ்வின் அனுபவம் இயேசு கிருபையாய் என்னை துக்கிவிட்ட அனுபவம் ஏராளமான அறிவாளிகள் மத்தியில் தமது புண்ணியங்களை அறிவிக்க தெரிந்தெடுத்தாரே அந்த கிருபையின் அனுபவம் எளியவர்களாகிய நம்மைத் தமது சன்னிதானத்தில் ராஜரீக ஆசாரியக் கூட்டமாக்கினாரே அந்த அனுபவம் இந்த கிருபை ஒன்றே போதுமே வாழ் நாள் முழுவதும் நாம் மகிழ்ச்சியாயிருக்க!



“பிதாவே உமது மகத்துவங்களை அறிவிக்க நீர் என்னையா தெரிந்தெடுத்தீர். இதை நினையாமற் போனேன். என்னை ஆட்கொள்ளும் ஜயா ஆமென்.”

Monday, September 3, 2012

கிறிஸ்தவத்தில் இருக்கும் கிறிஸ்து

இந்தியாவின் பிரபல கிறிஸ்தவ பணியாளரான சாது சுந்தர்சிங் என்பார், இந்து மதக் கல்லூரியொன்றுக்கு விஜயம் செய்தபோது, உலக மதங்கள் பற்றிய பாடத்திற்கான விரிவுரையாளர் ஒருவர் அவரிடம், “உமது பழைய மதத்தில் இல்லாத எதனை நீர் கிறிஸ்தவத்தில் கண்டு கொண்டீர்? எனக் கேட்டபோது, “அங்கு கிறிஸ்து இருக்கிறார்“ என்று பதிலளித்தார்

சாது சுந்தர்சிங்கின் பதிலைக் கேட்ட அவ்விரிவுரையாளர், “அது எனக்குத் தெரியும். முன்னர் உம்மிடம் இல்லாத அல்லது நீர் அறியாதிருந்த எதனை கிறிஸ்தவத்தில் கண்டீர்? எனக் கேட்டார்.“கிறிஸ்வத்தில் நான் கண்டு கொண்டது இயேசுகிறிஸ்துவையே“ என சாதுசுந்தர் சிங் பதிலளித்தார்.

இயேசுகிறிஸ்து உலக மதங்கள் அனைத்திலும் இருக்கிறார் எனக் கருதும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வரும் இக்காலத்தில் சாது சுந்தர்சிங்கின் அனுபவரீதியான பதில், கிறிஸ்வத்தில் மட்டுமே இயேசுகிறிஸ்து இருக்கிறார் எனும் உண்மையை உறுதிப்படுத்துகிறது.

“நான் கர்த்தர் இது என் நாமம். என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்“. (ஏசா. 42:8) எனத் தெரிவித்துள்ள தேவன், விக்கிரக வழிபாடுகளுள்ள மதங்களில் எல்லாம் தன்னைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார் எனக் கூறுவது உண்மைக்கு முரணாகவே இருக்கும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. 

கழுகு கூடு

கழுகு கூடு கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா? அதை நாம் பார்த்திருக்க நியாயமில்லை. அது கட்டும் முறை மிகவும் அருமையானது.

தாய் கழுகு தன் கூட்டைக் கட்ட ஆரம்பிக்கும்போது, நாம் நினைத்திராதபடிஇ முட்களையும், சிறுசிறு கற்களையும், கிளைகளையும் கொண்டு வந்து, கட்ட ஆரம்பிக்கும். அதைக் கட்டி முடித்தப்பின், அதன் மேல், மெதுவான மிருதுவான பஞ்சு, மெலிதான இறகுகள், தான் சாப்பிட்ட மிருகத்தின் தோல் இவற்றைக் கொண்டு அதன் மேல் பரப்பி, தன் முட்டைகளை சுகமாக இருக்கும்படி, அவற்றை ஒழுங்குப்படுத்தும். பின் முட்டையிட்டு, அதை அடைக்காத்து, அது குஞ்சுகளாக வந்து, அவற்றிற்கு இரையைக் கொண்டு வந்து ஊட்டி, அவற்றை வளர்க்கும். அவை வளர்ந்து, பறக்கும் நிலையை அடைந்தவுடன், தாய்க் கழுகு தன் கூட்டை கலைக்க ஆரம்பிக்கும். குஞ்சுகள் சொகுசாக இருந்த பஞ்சு மற்றும், மெலிதான இறகுகள் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டு விட்டு, முட்களையும், சிறுசிறு கூர்மையான கற்களையும் வெளியே வைத்துவிடும். அந்த மெத்தைப் போன்றவை போனவுடன், குஞ்சுகளுக்கு, கூடு குத்துகிற இடமாக, அவை தங்கியிருக்க முடியாத இடமாக மாறிப் போகும். அப்போது அவை தாமாக அந்தக் கூட்டைவிட்டு பறக்க ஆரம்பித்து, தன் இரையைத் தேட ஆரம்பிக்கும். பறக்கும் போது ஆரம்பம் மிகவும் கடினமாக இருக்கும் பறக்க எத்தணிக்கையில் குஞ்சுகள் கிழே விழுவதற்கு முற்ப்படும் அந்த வேளையில் தாய் கழுகு தன் செட்டைகளின் மேல் தன் குஞ்சுகளை சுமந்து செல்லும் ஆகவே தான் வேதாகமம் இப்படிக் கூறுகின்றது “ கழுகு தன் கூட்டை கலைத்து தன் குஞ்சுகளை செட்டைகளில் சுமந்து கொண்டு போவது போல தேவன் தாமே அவர்களை சுமந்தார். என்பதாக…
அன்பானவர்களே : நம்மில் கூட சிலர், அந்த கழுகின் குஞ்சுகளைப் போல தங்களுக்கு கிடைத்த கூட்டில் சுகமாய் இருக்கவே விரும்புகின்றனர். எழுந்து பறக்கக் கற்றுக்கொள்வோம்

தேவன் தாமே நம்மை சுமந்து சென்று பாதுகாத்தருள்வார்

உள்ளபடியே ஏற்றுக்கொள்வார்.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்…. நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.  ( 1யோவான் 1 : 9 ) 

ஒரு மண்டபத்திலே ஒரு வேலையை முடிப்பதற்காகக் காத்திருந்தனர். அங்கே அழகான ஒரு குழந்தை அழகிய வர்ணமுள்ள சட்டை அணிந்தவளாக அங்கிருக்கும் ஒவ்வொருவரிடமும் சென்று விளையாடிக்கொண்டிருந்தாள். ஆனால் ஒரு குறிப்பிட்ட பெண் மாத்திரம், அக் குழந்தை அவளிடம் செல்லும் போது அக்குழந்தையை கவனிக்காமல் இருந்தாள். அப்பொழுது அங்கிருந்த அனைவரும் ஒரு அழகான குழந்தையோடு இவளுக்கு விளையாடக்கூடத் தெரியவில்லை. மிகவும் கல்நெஞ்சக்காரிபோலும் என்று பேசிக்கொண்டு தொடர்ந்து அக் குழந்தையோடு அனைரும் விளையாடினர். சிறிது நேரத்தில் அக்குழந்தையில் இருந்து ஏதோ துர்நாற்றம் வருவதை அனைவரும் உணர்ந்து கொண்டதால், அக்குழந்தையை அருவருப்போடு விரட்டத் தொடங்கினர். குழந்தையோ இவ்வளவு நேரமும் தன்னோடு சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்த ஒவ்வொருவரிடமும் மாறி மாறிச் சென்றது. அனைவரும் கவனியாது விரட்டியடித்தனர். கடைசியில் அக்குழந்தை தன்னை முதலில் கவனியாதுவிட்ட பெண்ணிடம் அழுதுகொண்டு சென்றது. அப்பொழுது அப்பெண் குழந்தையை அன்போடு வாரி அணைத்துக்கொண்டாள். பிள்ளையை துக்கிச்சென்று அதன் நாற்றத்தை கழுவி அதற்குப் புது உடை அணிவித்து மீண்டும் அனைவரும் விரும்பும் அழகான குழந்தையாக்கினாள். அப்பொழுதுதான் தாம் கல்நெஞ்சக்காரி என்று யாரை நினைத்தார்களோ! அவளே அக்குழந்தையின் தாய் என்பதை அங்கிருந்தோர் உணர்ந்து கொண்டனர்.

எமது வெளித்தோற்றமாகிய அழகு, அந்தஸ்து, படிப்பு, பணம், வசதி, திறமைகள் போன்றவற்றைப் பார்த்து பிறர் எம்மீது மதிப்பும், கரிசனையும், விருப்பும் காட்டலாம். இவைகளெல்லாம் எம்மை விட்டு எடுபடும்போது சமுதாயத்தில் எம் மதிப்பு குறைந்து போகலாம். ஆனால் எம்மை உள்ளபடியே, நாம் இருக்கும் நிலையிலேயே, பாவமும் அக்கிரமமும் நிறைந்து நாறிப்போய் இருக்கும் உள்ளத்துடனேயே எம்மை எற்றுக்கொண்டு தன் தூய ரத்தத்தால் எம்மை கழுவி, எம்மை தம் பிள்ளையாக்கி நித்தியமான வாழ்வை எமக்கு தர ஆண்டவரால் மாத்திரமே முடியும். என்னையும் உங்களையும் உள்ளபடியே எற்றுக்கொடாரல்லவோ. இப்படிப்பட்ட உன்னதமான இரட்சிப்பை அவர் முலமாய் பெற்றுக்கொண்ட நாம் ஏனோதானோ என்று எந்தவிதமான அர்ப்பணமும் நோக்கமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? அவருக்காக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எமது ஜீவிய காலமெல்லாம் அவருக்கே சேவை செய்ய எம்மை இன்றே அவர் பாதத்தில் ஒப்புக்கொடுப்போமா.

உனக்காக மரித்தார்.

ஆபிரகாம்லிங்கன் அமெரிக்க ஜக்கிய நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நீக்ரோக்களை அதிகமாக நேசித்து அவர்கள் மீதிருந்த அடிமைதனத்தின் நுகத்தை முறிப்பதற்க்கு பாடுபட்டார். அடிமை வியாபாரத்தை ஒழிக்கும்படி அவர் சட்டத்தையும் இயற்றினார். இதனால் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா? ஒரு தீயவனின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். குண்டு பாய்ந்த அவர் உயிரற்ற சடலம் அவரின் சொந்த ஊரான எலினா என்னுமிடத்திற்;கு திறந்த வண்டி மூலம் கொண்டு வரப்பட்டது. ஆயிரம் ஆயிரமாம் மக்கள் தங்கள் தலைவனுக்கு கடைசி அஞ்சலி செலுத்தினார்கள். அப்பொழுது ஒரு நீக்ரோ மாது, ஆபிரகாம்லிங்கனின் இறுதிக் கிரிகைகளை காண அவ்விடத்திற்க்கு விரைந்து வந்தாள். ஆனால் ஜனக்கூட்டமோ மிக அதிகமாய் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது அவள் தன் மகனைக் கையினால் பிடித்து ஜனக்கூட்டத்திற்க்கு மேலாக உயர்த்தி “ மகனே பார் நன்றாக பார் அவர் உனக்காக மரித்தார்” என்று கதறிக்கொண்டு.



“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார்.

முழுமையும் மன்னிக்கப்பட்டது

எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ. எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ. அவர்கள் பாக்கியவான்கள். ( ரோமர் 4:7 )

மகன் செய்த குற்றத்திற்க்காக அவனை ஒரு மணிநேரம் அறையிலே தனிமையில் இருத்திவிட்டார். தந்தையார். ஒரு மணிநேரம் கழித்ததும் ஒரு கடதாசி தாளுடன் அறையைவிட்டு வெளியில் வந்த மகன் நேராக தகப்பனிடம் சென்றான். அப்பா நான் செய்த தவறுகளையெல்லாம் இத்தாளிலேயே எழுதியுள்ளேன். நான் இனிமேல் இப்படியாகச் செய்யமாட்டேன். என்று மனம் வருந்தி கேட்டுக்கொண்டான். அத்தாளை வாங்கிய தந்தையார் அதில் உள்ளவற்றையெல்லாம் ஒரு இறப்பரினால் அழித்துவிட்டு மகனே எல்லாவற்றையும் நான் மன்னித்து விட்டேன். இனி நல்லவனாய் பொறுப்புள்ளவனாய் நடந்து கொள்வாய் என்று நம்புகிறேன் என்றார்.

எழுதப்பட்ட தாள் எவ்விதம் வெறுமையாக்கப்பட்டதோ அதுபோலவே கறைபடிந்த எமது பாவ வாழ்வும் இயேசுவின் இரத்தத்தினால் ஒரு வெள்ளை தாளைப்போல சுத்திகரிக்கப்படுகிறது. தீயவர் திருடர், கொடியவர், கொலைஞர் இப்படியாக எத்தனையோ பேரின் வாழ்வு தேவனால் தொடப்பட்டு மாற்றங்கள் கண்டிருக்கிறது. செய்த குற்றத்திற்க்காக துக்குத்தண்டனைக்கு காத்திருந்த எத்தனையோ பேரின் வாழ்வும்கூடää சிறச்சாலையில் வைத்து தேவனால் தொடப்பட்டுள்ளது. துக்கு தண்டனையால் அவர்களின் உயிர் உடலைவிட்டு பிரிந்து போனாலும், நித்திய நித்தியமாய் தேவனோடுகூட வாழும் சிலாக்கியத்தை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். நாம் விரும்பி பாடுகிற "ஒ தேவனுக்கு மகிமை என்னை துக்கியெடுத்தார்". என்ற பாடலை பாடியவரும் ஒரு துக்கு தண்டனை கைதியாகும். அவர் இரட்சிக்கப்பட்ட பின்னர், துக்கு தண்டனைக்காக அவரை அழைத்துச்சென்ற போதே அவர் இப்பாடலை இயற்றிப் பாடியதாகக் கூறப்படுகிறது. அவர் சந்தோஷத்தோடே அக்கரையில் நான் நின்று அவரை என்றென்றும் பாடுவேன் என்று பாடிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

தேவன் நமக்கு பாவத்திருந்து தரும் விடுதலை முற்றிலும் முழுமையானது. பாவத்தை வெறுத்து வெற்றியோடு வாழவே தேவன் எம்மை இரட்சித்திருக்கிறார். மாறாக பாவத்தைச் செய்து, செய்து மீண்டும் மீண்டும் மன்னிப்பு பெறவும் இரட்சிப்படையவுமல்ல என்பதை நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். தேவன் தரும் வெற்றியானது முற்றிலுமான முழுவதுமான வெற்றி. அதைப் பெற்றுக்கொண்டவர்கள் வாழ்வில் வீழ்ச்சிக்கு இடமேயில்லை. விழுந்தாலும் மீண்டும் வெற்றியோடு எழுந்து வெற்றி வாழ்வு வாழ்வார்கள். எனனில் அவர்கள் இப்பொழுது இயேசுவுக்குச் சொந்தமானவார்கள்.

எனவே அன்பான நண்பர்களே இறைவன் தருகின்ற இலவசமான இரட்சிப்பை பெற்று இறைவனுடைய அன்பில் வளர்ந்து அனேகருக்கு பிரியோஜனமாய் மாறுவோமாக..

“நான் உயிரோடிருக்கிறேன்”

பதினொன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற ஹேஸ்டிங்க்ஸ் யுத்தத்தில் நார்மனியர் இங்கிலாந்தை முற்றுகையிட்டு இருந்தனர். அந்த யுத்தத்தின்போது நார்மனியரின் தலைவனான வில்லயம் கொலை செய்யப்பட்டு விட்டான் என்ற ஒரு வதந்தி போர்க்களத்திலிருந்து நார்மனியரின் நடுவே காட்டுத்தீ போல பரவிற்று. தங்கள் தலைவன் கொலை செய்யப்பட்டு விட்டான் என்ற செய்தியை கேட்டபோது அவர்களது கைகள் தளர்ந்து போயின. அவர்களுடைய உள்ளங்களில் சோர்வும். சோகமும் மேலிட்டன. தங்கள் தலைவனை இழந்து விட்டதால் தாங்கள் யுத்தத்தில் தோல்வியடைவது திண்ணம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டனர்.
‘யுத்தக்களத்திலிருந்து தாயகம் திரும்பி விடலாம்’ என்று தங்கள் இருதயத்தில் தீர்மானித்து விட்ட போர் வீரர்களும் இருந்தனர். இதை கேள்வியுற்ற தலைவனாகிய வில்லயம் துடித்தெழுந்தான்.

அவன் தன் குதிரையின் மேல் ஏறி தன் வீரர்களின் முகாம்கள் அமைந்திருந்த அனைத்து இடங்களுக்கும் விரைவாக சென்று, “நான் உயிரோடிருக்கிறேன்” என்று உரத்த சதத்ததுடன் முழங்கினார். அதை கேட்ட நார்மனியர் புத்துயிர் அடைந்தனர். அவர்களுடைய சோர்வும் சோகமும் அவர்களை விட்டகன்றன. தங்கள் கைகளை அவர்கள் மீண்டும் யுத்தத்திற்காக திடப்படுத்தினர். முடிவில் அப்போரில் அவர்கள் மகத்தான ஜெயம் பெற்று இங்கிலாந்தை கைப்பற்றினர். உலக சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பின் நடந்த சம்பவங்களை நமக்கு நினைவூட்டுகிறதல்லவா? மேலே வாசித்த சம்பவத்தில் நார்மனியர்கள் தங்கள் தலைவனை நினைத்து வருந்தி கலங்கினது போலவே இயேசுவின் சீடர்களும் கலங்கி காணப்பட்டனர். இரட்கர் இயேசு சிலுவையில் கொலை செய்யப்பட்டார். இனி நமது எதிர்காலம் என்னவோ? என்று வேதனையுற்றனர். ஆனால் மரணத்தை வென்று உயிரோடு எழுந்த இயேசு தன் சீடர்களுக்கு தரிசனமாகி அவர்களை தைரியப்படுத்தினார். “இதோ, உலகத்தில் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என திருவுளம் பற்றினார். உயிர்த்தெழுந்த இயேசுவின் தரிசனத்திற்கு பின்பாக, பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டு, பதினோரு சீடர்களும் ஆவியில் பெலனடைந்தனர். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்காக ஒவ்வொருவரும் வைராக்கியமாய் செயல்பட்டு கிரியை செய்தனர். அதன் விளைவாக உலகமங்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு தேவனுடைய சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன.

இச்செய்தியின் மூலமாக தேவ ஆவியானவர் உங்களை அவருக்குள்ளாக தைரியப்படுத்துகிறார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக! நான் உங்களை திக்கற்றவர்களாய் விடேன் என்று உங்களை பார்த்து இயேசுகிறிஸ்து கூறுகிறார். நான் தனிமையாய் இருக்கிறேன்இ எனக்கு என்று யாருமில்லை என்று தவிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். இம்மானுவேல் என்னும் இயேசு இரட்சகர் உங்களோடிருக்கிறார். நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்இ திகையாதே நான் உன் தேவன்இ நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன்.

- (ஏசாயா 41:10) என்று வாக்குதத்தம் பண்ணினவர். வாக்கு மாறாதவராக உங்களுடனே கூட இருக்கிறார். தைரியப்படுங்கள். சோர்ந்து போகாதிருங்கள். உங்கள் இருதயம் கர்த்தருக்குள் பலப்படுவதாக!